பூவார் திருநுதல்மேல் பொற்சுட்டி இட்டொளிரக் கோவாக் குதலை சிலம்பரற்ற - ஒவா தழுவான் பசித்தான் என்றாங் கிறைவன் காட்டத் தொழுவான் துயர்தீர்க்கும் தோகை - வழுவாமே முப்பத் திரண்டறமும் செய்தாள் முதிராத செப்பொத்த கொங்கைத் திருநுதலி - அப்பன் அருளாலே ஊட்டுதலும் அப்பொழுதே ஞானத் திரளாகி முன்னின்ற செம்மல் - இருள்தீர்ந்த காழி முதல்வன் கவுணியர்தம் போர்ஏறு ஊழி முதல்வன் உவன் என்று - காட்டவலான் வீழி மிழலைப் படிக்காசு கொண்டபிரான் பாழி அமணைக் கழுவேற்றினான் - பாணர் யாழை முறித்தான் எரிவாய் இடும்பதிகம் ஆழி உலகத் தழியாமற் - காட்டினான். ஏழிசை வித்தகன் வந்தேனோரும் வானோரும் தாழும் சரணச் சதங்கைப் - பருவத்தே பாலையும் நெய்தலும் பாடவலான் சோலைத் திருவா வடுது றையில் செம்பொற் - கிழிஒன் றருளாலே பெற்றருளும் ஐயன் தெருளாத தென்னவன் நாடெல்லாம் திருநீறு - பாலித்த மன்னன் மருகல்விடம் தீர்த்த பிரான் பின்னைத்தென் கோலக்கா வில்தாளம் பெற்றிக் - குவலயத்தில் முத்தின் சிவிகை அரன் கொடுப்ப முன்னின்று தித்தித்த பாடல் செவிக்களித்தான் - நித்திலங்கள் மாடத் தொளிரும் மறைக்காட் டிறை கதவைப் பாடி அடைப்பித்த பண்புடையான் - நீடும் திருவோத்தூர் ஆண்பனையைப் பெண்பனைஆ கென்னும் பெருவார்த்தை தான் உடைய பிள்ளை - மருவினிய கொள்ளம்பூ தூர்க்குழகன் நாவா யது கொடுப்ப உள்ளமே கோலாக ஊன்றினான் - வள்ளல் மழவன் சிறு மதலை வான்பெருநோய் தீர்த்த குழகன் குலமறையோர் கோமான் - நிலவிய வைகை ஆற் றே டிட்டு வான்நீர் எதிர்ஒட்டும் செய்கையான் மிக்க செயலுடையான் - வெய்யவிடம் மேவி இறந்த அயில் வேற்கண் மடமகளை வாவென் றழைப்பித் திம்மண்ணுலகில் - வாழ்வித்த சீர்நின்ற செம்மைச் செயலுடையான் நேர்வந்த புத்தன் தலையைப் புவிமேல் புரள்வித்த வித்தகப் பாடல் விளம்பினான் - மொய்த்தொளிசேர் கொச்சைச் சதுரன்தன் கோமானைத் - தான்செய்த பச்சைப் பதிகத் துடன்பதினா றாயிரம்பா வித்துப் பொருளை விளைக்க - வலபெருமான் முத்திப் பகவ முதல்வன் திருவடியை அத்திக்கும் பத்தர்எதிர் ஆணைநம - தென்னவலான் கத்தித் திரிபிறவிச் சாகரத்துள் ஆழாமே பத்தித் தனித்தெப்பம் பார்வாழத் - தந்தபிரான் பத்திச் சிவம்என்று பாண்டிமா தேவியொடும் கொற்றக் கதர்வேற் குலச்சிறையும் - கொண்டாடும் அற்றைப் பொழுதத் தமணர்இடும் வெந்தீயைப் பற்றிச் சுடுகபோய்ப் பாண்டியனை - என்னவல்லான் வர்த்தமா னீசர் கழல்வணங்கி வாழ்முருகன் பத்தியை ஈசன் பதிகத்தே - காட்டினான் அத்தன் திருநீல நக்கற்கும் அன்புடையான் துத்த மொழிக்குதலைத் தூயவாய் - நன்னுதலி கொத்தார் கருங்குழற்கும் கோலச்செங் - கைம்மலர்க்கும் அத்தா மரைஅடிக்கும் அம்மென் குறங்கினுக்கும் சித்திரப்பொற் காஞ்சி சிறந்தபே - ரல்குலுக்கும் முத்தமிழ்நூல் எல்லாம் முழுதுணர்ந்த பிள்ளையார்க்கு ஒத்த மணம் இதுஎன் றோதித் - தமர்களெல்லாம் சித்தம் களிப்பத் திருமணம்செய் காவணத்தே அற்றைப் பொழுதத்துக் கண்டுட - னேநிற்க பெற்றவர்க ளோடும் பெருமணம் போய்ப்புக்குத் தன்அத்தன் அடியே அடைந்தான் அழகிதே.
| [ 1]
|